Ticker

6/recent/ticker-posts

இறந்து விட்டதாக கருதி பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் உயிரோடு திரும்பினார்

மும்பாய் நகரத்தில்  ஒரு பஸ் நிலையத்தில்  உணர்வின்றி கிடந்ததாக பிரகாஷ் என்ற 45 வயதுடைய ஒருவரை பொலிஸார் மும்பையின்  நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். பின்னர் அவரது உடலை ருத்துவமனை விதிகளுக்கு மாறாக உடனடியாக பிரேத அறைக்கு அனுப்பிவைத்தனர்.


இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட எந்த ஒரு நோயாளியையும், மருத்துவமனை வார்டிலேயே இரண்டு மணிநேரம் வைத்திருக்கவேண்டும் என்பது விதி. அப்போதுதான் மருத்துவர்கள் ஏதாவது தவறு செய்துவிட்டார்களா என்று கண்டறியமுடியும். ஆனால் இவர் உடனடியாக பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

ஆனால்  பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரகாஷ் சிறிது நேரத்தில்,எழுந்து நடமாடி உள்ளார். இதைபார்த்து  பிரேத அறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடையாக ஊழியகள் அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். தற்போது பிரகாஷின் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்படட்டு உள்ளதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments