Ticker

6/recent/ticker-posts

காணமற்போன பிரகீத் எக்னலிகொட குறித்த எந்தவிபரமும் இல்லை- சந்தியா எக்னலிகொட

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பாக குற்றப்புலானய்வு பிரிவினரிற்கு  சில தகவலகள் கிடைத்துள்ளதாக அவரது  மனைவி  சந்தியா தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 
 
எனது கணவர் குறித்து எந்தவிபரமும் தெரியாத நிலையே இன்னமும் காணப்படுகின்றது. ஆனால் புதிய அரசாங்கம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைகளை ஓப்படைத்துள்ளது.
 
கடந்த ஐந்து வருடங்களாக  பொலிஸார் இது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிலரின் தலையீடு காரணமாக விசாரணைகளும் நிறுத்தப்பட்டன.
 
ஆனால் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.அவர்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.ஆனால் அது தெளிவற்ற தகவல், நீதிமனறத்திற்கு அந்த தகவல் சென்றடையும் என எதிர்பார்க்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments