Ticker

6/recent/ticker-posts

சந்திரிக்கா உள்ளவரை மகிந்த அரசியலில் இல்லை: நளின் பண்டார

சந்திரிக்கா குமாரதுங்க உள்ளவரை மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குவரும் விளையாட்டு சரி வராது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கு கூட்டணியினுள் உள்ள சுதந்திர கட்சி அல்லாத சிலர் தடுமாறுகிறார்கள்.
எங்கள் பிரதருக்கு எதிராக சவாலான ஒருவர் தற்பொழுது அரசியலில் இல்லை என்பதனால் தான் இந்த தடுமாற்றம்.
ஆனால் எங்களுக்கு தெரியும் சந்திரிக்கா உள்ளவரை எதிர்க்கட்சியில் ஒவ்வொருவராக ஒருவரை அழைத்துவர இடமளிக்க மாட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சவால் விடுவதற்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒருவரும் இல்லை.
பிரதமருக்கு சவால் விடுவதென்றால் மரித்த ஒருவரை உயிரோடு கொண்டு வரவதற்கு சமம் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments