Ticker

6/recent/ticker-posts

திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இரகசிய பொலிஸார் விசாரணை!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமாகிய திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். 

குற்ற விசாரணை பிரிவினர் இன்று (30) காலை திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் - மைத்திரி இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் என்று கூறி ஆவணம் ஒன்றை வெளியிட்டார். 

அதன்பின் அந்த ஆவணம் பொய்யானது என்றும் அதில் உள்ள தனது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதென்றும் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் அதிபருக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு கேட்டிருந்தார். 

அதன் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments