கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும். இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் - காலத்தின் தேவையாகும். கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.புத்தளம் iSoft கல்லூரியின் விருது வழங்கல் விழா அண்மையில் கந்தையா மண்டபத்தில் நடை பெற்றது. இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் மேற்கண்டவாறு கூறினாா்.
0 Comments