Ticker

6/recent/ticker-posts

தவ்ஹீத் ஜமாஅத் மீது பொது பல சேனா பதிவு செய்துள்ள மத நிந்தனை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது i

பௌத்த மதத்தை இழிவு படுத்தியதாக குற்றம் சாட்டி தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் மீது பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 23ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடத்தப்பட்ட மார்க்க விளக்க நிகழ்ச்சியில் “முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் ஆற்றிய உரையில் பௌத்த மதத்தை இழிவு படுத்திப் பேசினார் என்று குற்றம் சாட்டி பொது பல சேனாவினால் கொழும்பு, பிரதான நீதிவான் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் விசாரனை இன்று நீதிபதி கலன்சூரிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கை மீண்டும் 23.02.2016ம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரியாழ், துணை தலைவர் சகோ. பர்சான், பொருளாளர் சகோ. ரிழ்வான், துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் இணையதள பொறுப்பாளர் சகோ. தவ்சீப் அஹ்மத் ஆகியோர் மன்றில் ஆஜரானார்கள்.

குறித்த வழக்கு விசாரனையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க, சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன மற்றும் மஞ்சுல பதிராஜ, அஞ்சுல பெனடிக், சுகந்தி ஸ்ரீ வர்தன, நுஸ்ரா ஸரூக் உள்ளிட்ட குழுவினர் ஆஜரானமை குறிப்பிடத்தக்கதாகும்.

-ஊடகப் பிரிவு
தவ்ஹீத் ஜமாஅத்

Post a Comment

0 Comments