சற்று முன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கோண்ட தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய, இம்முறை தேர்தலானது சுமுகமான முறையில் நடைபெற்றதாக தெரிவித்தார். வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் நிலையில் தற்போது எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குவீதம் தொடர்பான தரவுகள் துல்லியமானதான இருக்க முடியாதென்றும் தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் அவர் மக்களை வேண்டிக்கொண்டார்.
0 Comments