Ticker

6/recent/ticker-posts

யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்ற வசந்த முதலிகே! ”இது பௌத்த நாடு” “யாழ்ப்பாணத்துக்கு போராட்டம் (அரகலய) வேண்டாம்” என்று ஒரு கும்பல் கோஷம்!


வடக்கு கிழக்குப் பல்கலைக்கழகங்களுடன் இதுவரை இணைக்கப்படாத அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கான கூட்டுப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட உத்தேசித்துள்ளது.

இது தொடா்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலியின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது வெளியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்த ஒரு கும்பல்,  “யாழ்ப்பாணத்துக்கு போராட்டம் (அரகலய) வேண்டாம்”, “உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறு” ” யாழ்ப்பாணத்திற்கு தொழிற் சங்க நடவடிக்கை வேண்டாம்”  என்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக் கழகப் பாதுகாப்புப் பிரிவினர் இந்த கும்பலை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்ற போதும் கலந்துரையாடல்   தொடர்ந்தது வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments