(FAROOK SIHAN)
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே மத்தியஸ்த ஆளுமை விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மையமாக்கக் கொண்டு கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில், கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த சபைகள் அபிவிருத்தி உத்தியேகத்தர் இம்திஸா ஹஸனினால் கல்முனை அல். பஹ்ரியா தேசிய பாடசாலையில் மத்தியஸ்த ஆளூமை விருத்தி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
பாடசாலை அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கருத்தரங்கில் க.பொ.த உயர்தர மாணவர்கள் 36 பேர் கலந்து கொண்டனர்.
0 Comments