Ticker

6/recent/ticker-posts

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட குஷான்!


ஓமானில் வீட்டுப் பணிப் பெண்களை பாலியல் அடிமைகளாக கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓமானில்  உள்ள இலங்கை தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷான் இன்று இலங்கை வந்த போது  குற்றப் புலனாய்வு பிாிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இன்று (29) அதிகாலை அவா் நாடு திரும்பிய போதே இந்த கைது இடம்பெற்றிருக்கிறது.

குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments