பாலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு, பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தை முன்னிட்டு எதிா்வரும் (நவம்பர்) 29ம் திகதி செவ்வாய்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை பிஎம்ஐசிஎச் (BMICH) வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான ஒலிம்பஸ் கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்கில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி ஆர்வலர்களான அம்பிகா சத்குருநாதன் மற்றும் குசும் விஜேதிலக்க ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
"ஆசியாவின் கடைசி காலனிக்கு முடிவு: பாலஸ்தீனத்திற்கான நீதி" என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு இடம்பெறவிருக்கிறது.
0 Comments