Ticker

6/recent/ticker-posts

பத்திாிகையாளா் சுட்டுக் கொலை!


கென்யாவின் நைரோபியில் வைத்து பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளரான அர்ஷத் ஷெரீப் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் மனைவி ஜவீரியா சித்தீக் தனது டுவிட்டா் பதிவில்  இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரீப்  பாகிஸ்தானில் மரண அச்சுறுத்தல் காரணமாக துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளாா். துபாயிலும் அவருக்கு உயிா் அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக அவா் கென்யாவுக்கு சென்றுள்ளார்.

தனது கணவர் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதக் குழுவால் கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது மனைவி ஜவீரியா சித்தீக் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட 50 வயதான அர்ஷத் ஷெரீப்  பாகிஸ்தானின் திறமையான, சிறந்த  ஊடகவியலாளர் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments