Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படும்!


நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டில் உள்ள தனது பணிகளில் பல மாற்றங்களைச் செய்யப்போவதாகவும், கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரகங்களை மூடப்போவதாகவும்  அறிவித்திருக்கிறது.

அதன்படி, பிராட்டிஸ்லாவா (ஸ்லோவேக்கியா), கொழும்பு (இலங்கை) மற்றும் பிரிஸ்டினா (கொசோவோ)  (மடகஸ்கர்) அண்டனானரிவோ மற்றும் ஹூஸ்டனில் (அமெரிக்கா) ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்கள்  மூடப்படும் என்று நோா்வேயின் வெளியுறவு அமைச்சர் அன்னிகன் ஹுட்ஃபெல்ட் Anniken Huitfeld தெரிவித்துள்ளார். 

இதன்படி, கொசோவோ, மடகாஸ்கர், ஸ்லோவாக்கியா மற்றும் இலங்கையுடனான நோர்வேயின் இராஜதந்திர உறவுகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் கையாளப்படும் என்று கூறியுள்ள அவா், இதற்கான பொறுப்புகள் அந்தந்த நாடுகளுக்கு அருகிலுள்ள நோர்வே தூதரகங்களுக்கு வழங்கப்படும் என்றும்  கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments