Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவோடு இணையும் மைத்திரி!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னை மஹிந்தவின் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.


எனவே, இரு கட்சிகளும் தங்களது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வகுப்பதில் இப்போது முழு கவனம் செலுத்தி வருகின்றன என்று அறியவருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அக்டோபர் 5 ஆம் திகதி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிரக்கிறது.

பல சிறப்பு முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) ஸ்ரீ.ல.சு.க எம்.பி.க்களின் கூட்டத்திற்கும்
அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சியின் மத்திய குழு கூட்டம் திங்கள்கிழமை கூட்டப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments