Ticker

6/recent/ticker-posts

அமைச்சரவை தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு

அமைச்சரவை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒவ்வொரு அமைச்சின் கீழும் செயற்படும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் என்பன வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 


புதிய திருத்தத்தின்படி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் தொடர்ந்தும்  ஊடக அமைச்சின் கீழ் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சட்டம் ஒழுங்கு அமைச்சிடம் காணப்பட்ட பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அரசாங்க அச்சுத் திணைக்களமும் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி கொலை சதி விசாரணைகள் நிறைவடையும் வரையில் ஜனாதிபதியிடம் பொலிஸ் திணைக்களம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 


Post a Comment

0 Comments