Ticker

6/recent/ticker-posts

மன்னாரில் யேசு நாதர் சிலை உடைப்பு!

மன்னாரில் 40 வருடங்கள் பழமைவாய்ந்த யேசு நாதரின் சிலை இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டி வெளி- பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த சிலை நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியூடாக கறோல் நிகழ்வில் கலந்து கொண்டு, மீண்டும் அவ்வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே குறித்த சிலை உடைக்கப்பட்டதை அவர்கள் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருட்தந்தை ச.சத்தியராஜ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற அருட்தந்தை, அதனை அவதானித்ததுடன், அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்று தடையங்களை பெற்றுக்கொண்டனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென பிரதேச மக்களும், கத்தோலிக்க சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments