பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினாவின் கட்சியான ஆளும் அவாமி லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஒருநாள் கிரிக்கெட் அணியின் கெப்டன் மஷ்ரபி முர்தசா (Mashrafe Mortaza) வெற்றி பெற்றுள்ளார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிவேட்பாளரை சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் முர்தசா வென்றுள்ளார்.
நரைல்-2 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முர்தசா 2,71,000 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஃபர்ஹத் 7,883 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதியன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடங்கிய ஒருநாள் தொடருக்கு முன்பு பேசிய முர்தசா வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், 2019 உலகக்கோப்பைக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறப் போவதகவும் தெரிவித்திருந்தார்.
பங்களாதேஷில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
0 Comments