அரசியலிலிருந்து ஒதுங்குமாறு ஜனாதிபதி சிறிசேனவுக்கு அவரது குடும்ப தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அறிய வருகிறது.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றிருக்கும் சிறிசேனவிற்கு அவரின் குடும்பத்தினரே அரசியலிலிருந்து விலகும் இந்த முடிவை வலியுறுத்தி வருவதோடு, கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி சிறிசேன மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாட்டின் பின்னர் அவரை சார்ந்திருந்த அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக கிளந்தெழுந்திருப்பதைக் காரணம் காட்டி மேற்படி அழுத்தம் பிரயோகிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை ஜனாதிபதியாக்கிய மக்கள் ஆணையை உதாசீனம் செய்த சிறிசேனவின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத மக்களிடம் , சரிந்து விழுந்துள்ள தனது செல்வாக்கை இனி ஒருபோதும் பாதுகாக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் சிறிசேனவும் அவரது குடும்பத்தினரும் நன்றாக உணர்ந்திருப்பதாகவும் அறிய வருகிறது.
0 Comments