கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றிய மருத்துவர் ஒருவர் கைதிக்கு மதுபான போத்தல்கள் இரண்டைக் கடத்திச் செல்லும் வேளையில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை மருத்துவமனையில் தொழில்புரியும் இந்த மருத்துவர் கைதிகளுக்கு இவ்வாறு மதுபோத்தல்களை கொண்டு சென்று கொடுப்பதாக கிடைத்த தகவலையடுத்தே சிறைச்சாலை பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மருத்துவமனை மருந்தக பிரிவில் தொழில்புரியும் ஒரு நபர் வலி நிவாரண கப்சூல்களுக்குள் ஹெரோய்ன் போதை மருந்தை நிரப்பி கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டிருப்பதாக சிறைச்சாலை அதிகாரி உடுவர தெரிவித்துள்ளார்.
0 Comments