Ticker

6/recent/ticker-posts

சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்: மனோ கணேசன்


நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்த்தரப்பில் அமர்பவர்கள் அனைவரையும் எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அவசியமும் தற்போதைக்கு இல்லை. பொதுத் தேர்தலை நடத்த போவதும் இல்லை. ஆனால் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “போர்த்துக்கேயர் ஆட்சி புரிந்தபோது யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை, சித்தாவக்கை என நாட்டில் பல்வேறு இராச்சிய பிரிவுகள் காணப்பட்டன. வேறுபட்ட இராச்சியத்தை வெள்ளையர்களே ஒன்றுப்படுத்தினர். அந்த ஒருமித்த நிலை தொடர்ந்து நாட்டில் நிலவ வேண்டும்.
எனவே மொழிகளுக்கான முக்கியத்துவத்தை புரிந்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் நிலையற்றது என்பதால் கிடைக்கபெரும் குறுகிய காலத்தில் தேசிய மொழிகளுக்கிடையில் ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments