Ticker

6/recent/ticker-posts

மங்கள, மைத்திரி இடையே முறுகல்! அரச ஊடகங்களை தம்வசம் வைத்திருக்க போராடும் சிறிசேன

மங்கள சமரவிக்ரம ஊடக அமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட போதும் அரச ஊடகங்களை தம்வசம் வைத்திருக்க ஜனாதிபதி  சிறிசேன போராடி வருவதாக அறிய வருகிறது.

19வது அரசியல் திருத்தத்தில் இரண்டு அமைச்சுகள் மட்டுமே ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில் சிறிசேன ஒருசில முக்கிய அமைச்சுகளையும் தன்வசம் வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

சிறிசேனவின் சட்டவிரோத இந்த நடவடிக்கையை  பலரும் விமர்சித்து வரும் நிலையில் ஊடக அமைச்சை தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க எடுத்த நடவடிக்கை ஊடக அமைச்சர் மங்கள் சமரவீரவுக்கும், சிறிசேனவிற்கும் இடையில் முறுகல் நிலையை தோற்றுவித்திருப்பதாக அறிய வருகிறது.

அரச ஊடகங்களை மேற்பார்வை செய்வதற்கு  தன்னால் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற சிறிசேனவின் கோரிக்கைக்கு மங்கள சமரவீர இணக்கம் தொிவித்ததன் பின்னர் இந்த முறுகல் நிலை முற்றுப்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Post a Comment

0 Comments