ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் விரைவில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில், சம்பிக்க ரணவக்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஹிருணிகா பிரேமச்சந்திரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் பலப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்வதற்குரிய வியூகங்களை வகுப்பதில் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீவிரங்காட்டி வருகின்றார். இதன் ஓர் அங்கமாக அரசியலில் பிரபல்யமான மற்றும் வாக்குவேட்டையாடுவதற்குரிய வல்லமைகொண்டவர்களுக்குத் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளார். அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளையும் தமது பக்கம் வளைத்துப்போடுவதற்கு முயற்சிக்கின்றார்.
இதன்பிரகாரமே சம்பிக்க ரணவக்க, மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4TamilMedia
0 Comments