Ticker

6/recent/ticker-posts

பயணிகளை பயமுறுத்திய ஏயார் ஏசியா விமானம்

பாங்கொங்கில் இருந்து வடகிழக்கு தாய்லாந்திற்கு செல்லவிருந்த ஏயார் ஏசியா விமானத்தின் சேமிப்பு பகுதியில் ஒழுங்கற்ற நிலை இருந்ததால் மீண்டும் பாங்கொங்கில் தரையிறக்கப்பட்டது.
பாங்கொங்கின் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொன் கேன் பகுதிக்கு நேற்று காலை 11.10 மணிக்கு ஏயார் ஏசியா நிறுவனத்தின் எப்.டி3254 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சேமிப்பு பகுதியில் ஒழுங்கற்ற நிலை இருந்ததை விமானிகள் கண்டுபிடித்தனர். இதனால், ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று கருதி மீண்டும் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியதாக ஏயார் ஏசியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர்கள், ஒழுங்கற்ற சேமிப்பக முறை காரணமாக விமானத்திற்கு எந்த தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படவில்லை என உறுதி செய்த பின் விமானம் மீண்டும் அதன் பயணத்தை மேற்கொண்டது.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அளித்த தாய் ஏயார் ஏசியா நிறுவனம், ‘டான் முயெங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் விமானிகள், அந்த விமானத்தில் சேமிப்பக முறையில் சிறிய ஒழுங்கற்றநிலை இருந்ததை கண்டறிந்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு விமானத்தை விரிவான ஆய்வுக்காக மீண்டும் டான் முயெங் சர்வதேச விமான நிலையத்தில் விமானிகள் தரையிறக்கினர்’ எனத் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments