Ticker

6/recent/ticker-posts

எனக்கு கொலை அச்சுறுத்தல்: சிப்லி பாறூக்

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார். 

காத்தான்குடியிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த சிப்லி பாறூக்,   'பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எனது கட்சியான அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் முடிவு எடுத்தது. அந்த முடிவின் பிரகாரம், கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்பட்டு கட்சி எடுத்த நிலைப்பாட்டை  பின்பற்றி வருகின்றேன்.

 இந்த நிலையிலேயே, எனக்கு தொடர்;ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதுடன்,  காத்தான்குடியிலுள்ள மட்டக்களப்பு தொகுதிக்கான அலுவலகம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் திங்கட்கிழமை (29)  திறந்துவைக்கப்பட்ட நிலையில்,  இந்த அலுவலகத்தினுள்  செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை புகுந்த சிலர்,  அலுவலகத்திலிருந்த கதிரைகள் சிலவற்றை உடைத்ததுடன், பதாதையும் சேதப்படுத்திவிட்டு, எதிர்வரும் மூன்றாம் திகதிக்கு இடையில் அலுவலகத்தை மூடவேண்டும் என்று அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

 இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளேன். தொலைபேசி மூலமும் குறுஞ்செய்தி மூலமும் முகநூலிலும் இவ்வாறு எனக்கு தொடர்ச்சியாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருகின்றன. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு இறைவன் உதவிசெய்வான்; என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு' என்றார்.   - See more at: http://www.tamilmirror.lk/136719#sthash.qUB54jm5.dpuf

Post a Comment

0 Comments