Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறுவர்களை பயன்படுத்துகிறார்: சட்டத்தரணிகள் கன்டணம்

ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சிறுவர்கள் கொடிகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் படங்களை உபயோகப்படுத்துவது தவறு எனவும் அதைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது நல்லாட்சிக்கான சட்டத்தரணிகள் சங்கம்.
அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் சமூக வலைத்தளப் பக்கங்கள் ஊடாகவும் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது சிறுவர் உரிமை சட்டத்திற்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கம், தேர்தல் ஆணையாளர் இது குறித்து நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments