ஜனாதிபதியின் தோ்தல் பிரசார மேடைகளை அலங்காிப்பதற்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சல்மான்கான் இன்று தனது தாய் நாட்டுக்கு திரும்பியிருப்பதாக அறிய வருகிறது.
இந்தியாவில் குறிப்பாக தழிழகத்தில் இவரின் வருகையை கண்டித்து திராவிட அமைப்புகள் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன. வைகோ தமிழினத்தின் எதிரியென்று சல்மான்கானை வசை பாடியிருந்தாா்.
நேற்று சல்மான்கானின் வாகன ஊா்வலத்தின் போது அவரது வாகனம் வெலிக்கட, அம்பகஹ சந்தியில் விபத்தில் சிக்கியது, அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே இந்த விபத்தில் சிக்கியது. இதில் இரு சிறுவா்கள் காயமடைந்தும் உள்ளனா். இந்த விபத்தை வெலிக்கடை பொலிஸாா் ஊா்ஜிதம் செய்துள்ளனா்.
இதேவேளை இந்திய நடிகா் சல்மான் கான் ஜனாதிபதியின் தோ்தல் பிரசாரத்திற்கு வரவில்லையென்றும், வெள்ள அனா்த்தத்தில் பாதிக்கப்பட்டவா்களை பாா்வையிட வந்தததாகவும் அமைச்சா் டலஸ் அலகப்பெரும இன்று (30) ஊடகவியலாளா் சந்திப்பின் போது கூறியிருக்கிறாா்.
0 Comments