பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வந்த அலுத் பரபுர கலைஞர்கள் குழுவினர் மீது இவ் வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர் கமல் இந்திக்க பொலிசில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் பேச்சாளர்.
நேற்றைய தினம் சுமார் 300 கலைஞர்கள் ஒன்று திரண்டு குறித்த சம்பவத்தைக் கண்டித்து பத்திரிகையாளர் மாநாடு ஒன்றினை நடாத்தியதுடன் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இன்று காலை அவர் சரணடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments