Ticker

6/recent/ticker-posts

48 சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர்

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்  48 பேர் வருகை தர இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, இவர்களில்  15 பேர் ஏற்கனவே இங்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

செவ்வாய்க்கிழமை  தேர்தல்கள் செயலகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இத் தகவலை அவர் வெளியிட்டார். பொது நலவாய அமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 48 பேர் வருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு குழு ஏற்கனவே இங்கு வந்துள்ளது. இக் குழுவுக்கு கயானா முன்னாள் ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். 

Post a Comment

0 Comments