Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய மஹிந்த!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான  கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ்டுரன்டுகளுக்கும், ஹோட்டல்களுக்கும் சொந்தக் காரரான இவா் மஹிந்தவோடு கூடிக்குலாவி திாிவதில் முன்னணியில் நினறவா்.
முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்த காலங்களில் கூட  மஹிந்தவுடனான இவாின் நட்பு மிகவும் நெருக்கமாகவே இருந்தது. தோ்தல் காலங்களில் முஸ்லிம்களை  மஹிந்தவின் மாளிகைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை இவா் கடந்த காலங்களில் கச்சிதமாக நிறைவேற்றுபவராய் இருந்துள்ளாா். சுருக்கமாக சொன்னால் மஹிந்தவின் தீவிர விசுவாசியாகவே  இருந்தவா்தான் இந்த தனவந்தா்.

நேற்று இந்த தனவந்த ஹாஜி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அவரது கால்டன் மாளிகைக்கு சென்றுள்ளாா்.  தோ்தல் தோல்வியில் துவண்டு போயிருக்கும் தனது நண்பனை சந்தித்து ஆறுதல் கூறும் நோக்கில் சென்ற இந்த முஸ்லிம் தனவந்தா்  கால்டன்  இல்லத்தில் காலடி வைக்கும் போதே மஹிந்தவின் மூத்த புத்திரான நாமல் ராஜபக்ஷவைக்  கண்டுள்ளாா்.

நாமலிடம் முன்னாள் ஜனாதிபதியை விசாாித்த போது, தனது தந்தை மேல் மாடியில் இருப்பதாக கூறிய நாமல் “ நீங்கள் எல்லோரும் சேர்ந்து எம்மை கவிழ்த்து விட்டீா்கள் அல்லவா? என்று கோபத்தோடு சீறிவிட்டு நகா்ந்திருக்கிறாா்.

ஆரம்பமே  அபசகுணமாக ஹாஜிக்கு புாிந்துள்ளது. என்றாலும் வந்ததற்காக மஹிந்தரை பாா்த்து, கதைத்து விட்டு கிளம்புவோம் என்ற எண்ணத்தில் மஹிந்தவின் அறையை நோக்கி நகா்ந்துள்ளாா்.

மஹிந்தவை வழமையாக தான் அடிக்கடி சந்திக்கும் அறைதான் அது. ஹாஜி தைாியமாக அறைக்குள்  நுழைந்திருக்கிறாா்.  வழமைக்கு மாறாக,  இவரைக் கண்டதும்  மஹிந்தவின் முகம் கோபத்தால் சிவந்துள்ளது. பல பௌத்த பிக்குகள் புடைசூழ வீற்றிருந்த மஹிந்தவின் முகம் கடும் கோபத்தில்  இறுக்கமாக இருந்ததை தனவந்தா் புாிந்து கொண்டுள்ளாா்.

கடந்த காலங்களில் மஹிந்த மிகவும் நட்பு கொண்டிருந்த இந்த தனவந்தரைக் கண்டதும் மஹிந்த ஓர் எதிரியைக் கண்டது போல ஒரேயடியாக சீறிப்பாய்ந்தள்ளாா்.  கடும் வாா்த்தைகளால் திட்டித் தீா்த்துள்ளாா்.

 “முஸ்லிம்களும், தமிழா்களும் சோ்ந்து என்னை அழித்து விட்டீா்கள்” என்று கீழ்த்தரமான முறையில் ( “தம்பிலா , தெமளு ஒக்கோம எக்கத்துவெலா மாவ நெத்தி கலா” ) என்று என்று சத்தமிட்டு திட்டியுள்ளாா்.   ஒரு மனநோயாளியின் நிலையின் மஹிந்தா் கொதிப்படைந்து இருந்ததைக் கண்டு ஹாஜிக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்தவின் கொலைவெறியைக் கண்ட  தனவந்தா் ஹாஜிக்கு கை கால்கள் உதறல் எடுத்துள்ளது.  தன்னுடனான மஹிந்தவின் உறவில் ஏற்பட்டிருந்த மாற்றம் ஹாஜியை அதிா்ச்சிககுள்ளாக்கி இருக்கிறது. தான் இங்கு தொடா்ந்து  இருந்தால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடும் என்ற அளவிற்கு மஹிந்த தனது கொலை வெறியை கக்கிக் கொண்டிருந்திருக்கிறாா்.

நிலைமையின் விபரீதத்தைப் புாிந்து கொண்ட  தனவந்த ஹாஜி அடுத்தக் கணமே  தப்பினேன் பிழத்தேன் என்று கால்டன் மாளிகையிலிருந்து  பாய்ந்து ஓடி வந்து, தனது வாகனத்தில் ஏறி வேகமாக கொழும்பை வந்தடைந்துள்ளாா்.

கால காலமாய் மஹிந்தவிற்கு “கடை”க்குப் போன இந்த ஹாஜிக்கே  இந்த நிலையென்றால், சாதாரண முஸ்லிம்கள் மீது மஹிந்தவின் கொலை வெறி எப்படி இருக்கும் என்று  இது தொடா்பாக தகவலை வெளியிட் கொழும்பு பிரபல அரசியல்வாதி ஒருவா் எமது இணையத்திற்கு கருத்து தொிவித்தாா்.


Post a Comment

1 Comments

  1. முஸ்லிம்களை அழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் போன்றே சென்ற ஆட்சியின் போது செயல்பட்டார் என்பதை யாரும் மறந்துவிடலாகாது. அவரது சூழ்ச்சிக்கு எதிராக அல்லாஹ் சூழ்ச்சி செய்ததன் விளைவே, அவரது வாயாலேயே தனது அழிவுக்கு நாள் குறிக்க வைத்தது. அனைப் பயன்படுத்தியது அரசியலில் எதிரணியான ஜவிபெ வும் ஐதேகவும், அதிருப்தியாளர்களான ஹெம்ல உரிமய வும், நலன்விரும்பிகளான மக்கள் தலைவர்களும். அவர்களோடு கைகோர்த்தனர், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், அநீதிக்கு உள்ளான தமிழர்களும். ஆதலால், மஹிந்தரிடம் இதை விட எதிர்பார்ப்பதற்க இல்லை. அவர் ஆட்சியில் அமர்ந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்கவும் முடியாது!

    ReplyDelete